Wednesday, April 12, 2006
Sunday, April 09, 2006
Saturday, April 08, 2006
Thursday, April 06, 2006
இருட்டடிப்பு செய்வது பத்திரிக்கை தர்மமா?
ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் பிரச்சார்த் தொடக்க விழா, நேற்று சென்னை புரசைவாக்கத்தில் நடந்தது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் எல்லோரும் பங்கேற்ற இந்த நிகழ்வில் உரையாற்றிய தலைவர்களின் உரையை தினமலர் விரிவாக வெளியிட்டுள்ளது. தினத்தந்தியும் விரிவாகவே வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த நிகழ்வில் பங்கேற்ற தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லாஹ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மைதீன் ஆகிய இருவரின் பேச்சுக்களை 4 நாளிதழ்களுமே வெளியிடவில்லை. இவர்களும் பங்கேற்று உரையாற்றினார்கள் என்று செய்தியை முடித்துக் கொண்டன. சிறுபான்மை இனத்தவர்களான இந்த 2 தலைவர்களின் பேச்சுக்களை மட்டும் இருட்டடிப்பு செய்வது அறமா?
Courtesy: தேர்தல் செய்தி கண்காணிப்பு 2006
Courtesy: தேர்தல் செய்தி கண்காணிப்பு 2006
Wednesday, April 05, 2006
Tuesday, April 04, 2006
நேபாளத்தில் பசு சாப்பிட்டால் 12 வருட சிறை

நேபாள நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள நீதிமன்றம் ஒன்று, பசுமாட்டினை கொன்ற குற்றத்திற்காக, பெண்மணி ஒருவருக்கு நீண்ட கால சிறைத்தண்டனையினை விதித்துள்ளது. இந்து மதத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் நேபாளத்தில் பசுமாடுகள் புனிதமாக கருதப்பட்டு, அவற்றினை பாதுகாக்க சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
தலைநகர் காத்மண்டுவின் வடமேற்கு பகுதியில், சுமார் ஐந்நூறு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சன்குவாசபா மாவட்டத்தின் நீதிமன்றமானது, குற்றம் சாட்டப்பட்ட பெண்மணிக்கு, அதிகபட்ச தண்டனையான 12 ஆண்டுகால சிறைத்தண்டனையினை விதித்துள்ளது. கிரிபா போதேனி என்று அழைக்கபடும் இந்த பெண்மணி, பசு மாட்டினை கொன்று, உண்டு விட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டதினை தொடர்ந்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். ஆனால் தான் பசு மாட்டினைக் கொல்லவில்லை என அப்பெண்மணி மறுத்துள்ளார்.
நன்றி: பிபிசிதமிழ்.காம்
கல்லூரி மாணவியை கற்பழித்த போலீஸ்காரர்
போலீஸ் நிலையத்தில்
கல்லூரி மாணவியை கற்பழித்த போலீஸ்காரருக்கு 12 ஆண்டு ஜெயில்
மும்பை, ஏப்.4-
மும்பையில், போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியை கற்பழித்த, போலீஸ்காரருக்கு 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
கல்லூரி மாணவி
மும்பையில் மராட்டிய அரசு தலைமைச் செயலகம் அருகே உள்ளது மெரைன் டிரைவ் புறக்காவல் நிலையம். இதன் அருகே உள்ள ஒரு அபார்ட்மென்ட் பகுதியில், கடந்த ஆண்டு, ஏப்ரல் 21-ந் தேதி பகலில், கல்லூரி மாணவி ஒருவர் (வயது17) தனது காதலனுடன் உல்லாசமாக இருந்தார். அதை அங்கிருந்த காவலாளி பார்த்து விட்டார். உடனே இரண்டு பேரையும் பிடித்து, மெரைன் டிரைவ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கற்பழிப்பு
அப்போது சுனில்மோர் என்ற போலீஸ்காரர் மட்டும் அங்கு இருந்தார். அவர், கல்லூரி மாணவியை மட்டும் போலீஸ் நிலையத்தில் இருக்குமாறு கூறி விட்டு, காதலனை விரட்டி விட்டார். பின்னர், தனியாக இருந்த மாணவியை பலவந்தமாக கற்பழித்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிஸ்மிஸ்-வழக்கு
இதையடுத்து போலீஸ்காரர் சுனில்மோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டது உண்மைதான் என்று தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சுனில்மோர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
பின்னர் போலீசார் அவரை கைது செய்து மும்பை கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் அரசு தரப்பு சிறப்பு வக்கீலாக உஜ்வால் நிகாம் என்பவர் ஆஜராகி வாதாடினார்.
இதனிடையே, சுனில்மோர் ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை கோர்ட்டு நிராகரித்து விட்டது. மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு கூறும்படி, செசன்சு கோர்ட்டுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
12 ஆண்டு சிறை
இதைத் தொடர்ந்து மும்பை செசன்சு கோர்ட்டில் வழக்கு விசாரணை சூடு பிடித்தது. அரசு தரப்பில் மொத்தம் 27 சாட்சிகள் ஆஜர் செய்யப்பட்டனர். கற்பழிக்கப்பட்ட கல்லூரி மாணவியும், அவளது காதலனும் தனித்தனியாக சாட்சியம் அளித்தனர். பின்னர் மாணவி மட்டும் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.ï.சாண்டிவால், போலீஸ்காரர் சுனில்மோருக்கு 12 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 26 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறினார்.
மேலும், சுனில்மோரிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராத தொகையை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
மரண தண்டனைக்கு இதுமேல்
தீர்ப்பை கேட்டதும், சுனில்மோர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசினார்.
நான் ஒரு அப்பாவி. எந்த தப்பும் செய்யாமல் என்னை குற்றவாளியாக்கி விட்டனர். எனக்கு 12 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது மரண தண்டனையை விட எவ்வளவோ மேல் என்று அவர் அப்போது தெரிவித்தார்.
Courtesy: Dailythanth.com
கல்லூரி மாணவியை கற்பழித்த போலீஸ்காரருக்கு 12 ஆண்டு ஜெயில்
மும்பை, ஏப்.4-
மும்பையில், போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவியை கற்பழித்த, போலீஸ்காரருக்கு 12 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
கல்லூரி மாணவி
மும்பையில் மராட்டிய அரசு தலைமைச் செயலகம் அருகே உள்ளது மெரைன் டிரைவ் புறக்காவல் நிலையம். இதன் அருகே உள்ள ஒரு அபார்ட்மென்ட் பகுதியில், கடந்த ஆண்டு, ஏப்ரல் 21-ந் தேதி பகலில், கல்லூரி மாணவி ஒருவர் (வயது17) தனது காதலனுடன் உல்லாசமாக இருந்தார். அதை அங்கிருந்த காவலாளி பார்த்து விட்டார். உடனே இரண்டு பேரையும் பிடித்து, மெரைன் டிரைவ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
கற்பழிப்பு
அப்போது சுனில்மோர் என்ற போலீஸ்காரர் மட்டும் அங்கு இருந்தார். அவர், கல்லூரி மாணவியை மட்டும் போலீஸ் நிலையத்தில் இருக்குமாறு கூறி விட்டு, காதலனை விரட்டி விட்டார். பின்னர், தனியாக இருந்த மாணவியை பலவந்தமாக கற்பழித்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிஸ்மிஸ்-வழக்கு
இதையடுத்து போலீஸ்காரர் சுனில்மோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் உயர் போலீஸ் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரித்தனர். அப்போது போலீஸ் நிலையத்தில் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்டது உண்மைதான் என்று தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து சுனில்மோர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.
பின்னர் போலீசார் அவரை கைது செய்து மும்பை கூடுதல் செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் அரசு தரப்பு சிறப்பு வக்கீலாக உஜ்வால் நிகாம் என்பவர் ஆஜராகி வாதாடினார்.
இதனிடையே, சுனில்மோர் ஜாமீன் கோரி மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை கோர்ட்டு நிராகரித்து விட்டது. மேலும் இந்த வழக்கை ஏப்ரல் 30-ந் தேதிக்குள் விசாரித்து தீர்ப்பு கூறும்படி, செசன்சு கோர்ட்டுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
12 ஆண்டு சிறை
இதைத் தொடர்ந்து மும்பை செசன்சு கோர்ட்டில் வழக்கு விசாரணை சூடு பிடித்தது. அரசு தரப்பில் மொத்தம் 27 சாட்சிகள் ஆஜர் செய்யப்பட்டனர். கற்பழிக்கப்பட்ட கல்லூரி மாணவியும், அவளது காதலனும் தனித்தனியாக சாட்சியம் அளித்தனர். பின்னர் மாணவி மட்டும் நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கே.ï.சாண்டிவால், போலீஸ்காரர் சுனில்மோருக்கு 12 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 26 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு கூறினார்.
மேலும், சுனில்மோரிடம் இருந்து வசூலிக்கப்படும் அபராத தொகையை, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
மரண தண்டனைக்கு இதுமேல்
தீர்ப்பை கேட்டதும், சுனில்மோர் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. பின்னர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் பேசினார்.
நான் ஒரு அப்பாவி. எந்த தப்பும் செய்யாமல் என்னை குற்றவாளியாக்கி விட்டனர். எனக்கு 12 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது மரண தண்டனையை விட எவ்வளவோ மேல் என்று அவர் அப்போது தெரிவித்தார்.
Courtesy: Dailythanth.com
Monday, April 03, 2006
வரதட்சிணைக்காக கொலை
வரதட்சிணைக்காக கொலை: 30 ஆண்டுகளாக பெண் குழந்தைகளே இல்லாத 5 கிராமங்கள்
போபால், ஏப். 3: வரதட்சிணை கொடுத்து ஏழ்மை நிலைக்கு சென்று விடுவோமே என்ற கவலையில் கடந்த 30 ஆண்டுகளாக பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொல்லப்பட்டு விடுகின்றனர்.
இந்த கொடூரச்சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் 5 கிராமங்களில் நடந்து வருகிறது.
இத்தகவலை ம.பி. மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கிருஷ்ண காந்த் தெரிவித்தார்.
பெண் குழந்தைகள் கொல்லப்படுவதால், 30 ஆண்டுகளாக அந்த கிராமங்களில் எந்தத் தம்பதிக்கும் மகள்கள் இல்லை. பெண் குழந்தைகளை காக்கும் பணியில் தற்போது மாநில மகளிர் ஆணையம் இறங்கி உள்ளது.
கிராமங்களுக்குச் சென்று பெண் குழந்தைகளை காக்கும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
பெண் குழந்தைகள் படுகொலை செய்யப்படும் கிராமங்களைத் தத்தெடுக்க வேண்டும் என தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.
Courtesy: Dinamani.com
போபால், ஏப். 3: வரதட்சிணை கொடுத்து ஏழ்மை நிலைக்கு சென்று விடுவோமே என்ற கவலையில் கடந்த 30 ஆண்டுகளாக பெண் குழந்தைகள் பிறந்தவுடன் கொல்லப்பட்டு விடுகின்றனர்.
இந்த கொடூரச்சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஒரு மாவட்டத்தின் 5 கிராமங்களில் நடந்து வருகிறது.
இத்தகவலை ம.பி. மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கிருஷ்ண காந்த் தெரிவித்தார்.
பெண் குழந்தைகள் கொல்லப்படுவதால், 30 ஆண்டுகளாக அந்த கிராமங்களில் எந்தத் தம்பதிக்கும் மகள்கள் இல்லை. பெண் குழந்தைகளை காக்கும் பணியில் தற்போது மாநில மகளிர் ஆணையம் இறங்கி உள்ளது.
கிராமங்களுக்குச் சென்று பெண் குழந்தைகளை காக்கும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
பெண் குழந்தைகள் படுகொலை செய்யப்படும் கிராமங்களைத் தத்தெடுக்க வேண்டும் என தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.
Courtesy: Dinamani.com
Sunday, April 02, 2006
Saturday, April 01, 2006
Subscribe to:
Posts (Atom)